விமானத்தில் நடிகையிடம் சில்மிஷம்: பொழுதுபோக்கு நிறுவனத்தின் உயர் அதிகாரி கைது
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை ஜாய்ரா வாசிமுக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த 39 வயது நபரை போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.
தங்கல் படம் மூலம் பிரபலமான நடிகை ஜாய்ரா வாசிம்(17) டெல்லியில் இருந்து மும்பைக்கு ஏர் விஸ்தாரா விமானம் மூலம் வந்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் இருந்த நபர் தனது காலால் அவரின் பின் பகுதி, கழுத்தை தடவியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜாய்ரா இந்த சம்பவம் குறித்து அழுது கொண்டே பேசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டார். மும்பை போலீசார் ஜாய்ராவை சந்தித்து பேசி வாக்குமூலம் வாங்கினர்.
அதன் பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார் மும்பையை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீனியர் எக்சிகியூட்டிவான விகாஸ் சச்தேவா(39) என்பவரை கைது செய்துள்ளனர்.
அசதியில் தெரியாமல் தனது கால் ஜாய்ரா மீது பட்டிருக்கும் என்று விகாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் விகாஸ் பொய் சொல்வதாக போலீசார் கூறியுள்ளனர். ஜாய்ரா எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் மீண்டும் விகாஸ் கொடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.