சிங்கப்பூர் குடவுனில் தீவிபத்து - ஒருவர் பலி ; 7 பேர் படுகாயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஜூரோங் பகுதியிலுள்ள தஞ்சோங் கிலிங் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும் அங்கு வெடிவிபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் வாசிகள் தெரிவித்துள்ளதாக செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.
JUST IN: 1 dead, 7 injured in fire at Tanjong Kling Road http://t.co/SywJOVfauH http://t.co/xnOLwdvq4P
— Channel NewsAsia (@ChannelNewsAsia) October 12, 2015 சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில் அங்கு மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்கும் படியும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 7 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications