யு.கே.: 10 வயது பாகிஸ்தானி சிறுமியை 10 ஆண்டுகளாக அடிமையாக வைத்து பலாத்காரம்
லண்டன்: காது கேளாத 10 வயது பாகிஸ்தானிய சிறுமி இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டு அங்கு ஒருவரின் வீட்டில் 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த காது கேளாத பெண் அவருக்கு 10 வயது இருக்கையில் இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்தில் உள்ள இல்யாஸ் அஷார்(85), தாலாத்(69) தம்பதி வீட்டில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டுள்ளார்.
அவரை தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வைத்துள்ளனர்.
மேலும் இல்யாஸ் அந்த பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காது கேளாத அவருக்கு எழுத, படிக்கத் தெரியவில்லை. ஆனால் அவரது பெயரை மட்டும் எழுத அஷார் குடும்பத்தார் கற்றுக் கொடுத்துள்ளனர். அதுவும் அவரை கையெழுத்து போட வைத்து சில நன்மைகளை தாங்க பெறவே பெயர் எழுத கற்றுக் கொடுத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு இல்யாஸ் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். இளம்பெண்ணை கடத்தி வந்து அடிமையாக வைத்து பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இல்யாஸுக்கு 15 ஆண்டுகள் சிறையும், அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 98 லட்சத்து 41 ஆயிரத்து 536 நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.