For Quick Alerts
For Daily Alerts
Just In
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் இருந்து கோரக்பூருக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த தடிங் நதிக்குள் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
செய்தி சுருக்கம் :
நேபாளத்தில் பேருந்து ஒன்று நிலைதடுமாறி தடிங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
Comments
English summary
12 Indians have died in a road accident in Dhading in Nepal. The tourists were going to Gorakhpur from Kathmandu, when the bus fell in a river in Dhading.
Story first published: Wednesday, April 22, 2015, 9:51 [IST]