அடுத்தடுத்து 5 முறை குலுங்கிய ஆப்கானிஸ்தான்.. நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலி

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல ஹெராட்டின் வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அதைத் தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 120 பேர் பலியாகியிருக்கலாம் என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

15 killed in powerful earthquake in Afghanistan

ஏற்கெனவே கடந்த ஆண்டு அப்கானிஸ்தானில் தென்கிழக்கு பகுதியில் இதேபோன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரின் மனிதிலும் இந்த 2022 நிலநடுக்கம் குறித்த அதிர்வு நீங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+