கால்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் பாலத்தில் கவிழ்ந்து விபத்து - 20 பேர் பரிதாப பலி
வெராக்ருஸ்: மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
20 dead in southern #Mexico bus crashhttps://t.co/yWBhQ0AiAl pic.twitter.com/Bspv2ipBRe
— New Straits Times (@NST_Online) January 11, 2016 மெக்சிகோ நாட்டின் வெராக்ருஸ் மாநிலத்தில் உள்ள அடோயக் நகராட்சியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர். நேற்று நடந்த இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின் படி ஓட்டுனரின் மிதமிஞ்சிய வேகத்தால் காட்டுப்பாட்டை இழந்தே பேருந்து அடோயக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குழந்தைகள் உட்பட உள்ளூர் போட்டிக்குச் செல்லும் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை அந்த பேருந்து ஏற்றிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications