இந்தோனேசியாவில் ராணுவ வீரர்கள்- கிளர்ச்சியாளர்களிடையே கடும் சண்டை.. 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பதற்றமான பப்புவா பகுதியில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 18 கிளர்ச்சியாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிகள், அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1960 களின் முற்பகுதியில், இந்தோனேசியாவின் பப்புவா தீவு டச்சு காலனியாக இருந்து வந்தது. ஆனால் இப்பகுதியை இந்தோனேஷியா இணைத்துக் கொண்டது. ஐ.நா.வின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வாக்குச்சீட்டு முறைக்கு பின்னர் 1969 இல் பப்புவா இந்தோனேசியாவில் இணைக்கப்பட்டது. அப்போது வாக்கெடுப்பில் முறைகேடு நடந்ததாக கூறி, பப்புவா தீவில் கிளர்ச்சி படைகள் உருவாகின.இந்த கிளர்ச்சி படைகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இன்டன் ஜெயாவில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை வழங்குவதற்காக ராணுவ அமைதிப்படை முகாமிட்டுள்ளது. இந்த குழுவினரை குறி வைத்து, இராணுவ தர ஆயுதங்கள் மற்றும் அம்புகளுடன், ஆயுதம் ஏந்திய ஏராளமான கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 20 பேர் உயிரிழந்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இவான் ட்வி பிரிஹார்டோனோ கூறினார்.
துருக்கி பேச்சுவார்த்தையை திடீரென புறக்கணித்த ரஷ்ய அதிபர் புதின்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு
இதனிடையே கிளர்ச்சி படையான மேற்கு பப்புவா விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் செப்பி சம்போம் கூறுகையில், தங்கள் குழுவில் 3 பேர் மூன்று பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறினார். மீதமுள்ளவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட "அப்பாவி பொதுமக்கள்" என்று அவர் கூறினார்.
கிளர்ச்சி குழுவின் முக்கிய உறுப்பினரான பூமிவாலோ எனம்பியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக, புன்காக் ஜெயாவில் வெள்ளிக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்கள் இரண்டு போலீசாரைக் கொன்றதாக சம்போம் கூறினார். சண்டைக்கு பிறகு அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கிளார்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ராணுவத்தினர். மேலும் ராணுவம் தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் மறுத்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications