ரஷ்யாவில் செல்ஃபி எடுக்கையில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளம்பெண் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் 21 வயது பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்து பலியானார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் அன்னா க்ருபெய்னிகோவா(21). சுற்றுலா பற்றி படித்துள்ளார். அவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பிற தோழிகளுடன் மாஸ்கோ நகரைச் சுற்றிப் பார்க்க சென்றார். அப்போது அவர் பாலத்தின் ஓரத்தில் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுக்கையில் நிலைதடுமாறி அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

அன்னா பற்றி ஆன்டன் என்பவர் கூறுகையில்,
அன்னா அமைதியானவர். ஆனால் மிகவும் உற்சாகமானவர். நாங்கள் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது அன்னா மட்டும் தனியாக சென்று செல்ஃபி எடுத்தார். திடீர் என அவர் அலறும் சப்தம் கேட்டது. அன்னா பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று யாரோ கூறினார்கள். அது ஜோக் என நான் முதலில் நினைத்தேன். ஆனால் மக்கள் அனைவரும் ஓடிப் போய் பார்த்தபோது தான் அன்னா இறந்ததை தெரிந்து கொண்டேன் என்றார்.
அன்னா குடிபோதையில் இருந்தாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அன்னா குடிபோதையில் இல்லை என்று அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் இந்த ஆண்டில் மட்டும் செல்ஃபி எடுக்கையில் 10 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications