காபூல் பல்கலைக்கழகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காபூல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென புகுந்த 3 தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குலை நடத்தியிருக்கிறார்கள். இதில் 19 பேர் உடல் சிதறி பலியாகினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக ஒருவர் மனித வெடிகுண்டை வெடித்த நிலையில் மற்ற இரணடு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சண்டை போட்டு சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்று தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. எந்த அமைப்பும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக அக்., 24 ல் காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.இப்போது நடத்திருப்பது இரண்டாவது சம்பவம் ஆகும்.
இதனிடையே காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கல் அவர் வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆதரவளிப்போம் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications