தறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்!
சாலைவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி: அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விபத்துக்குள்ளானதில், 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கிளபாஸ் மாநிலத்தில் மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில், 50க்கு மேற்பட்டோர் இருந்தனர்.
சோயலோ என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டைஇழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது தூரத்தில் சாலையிலேயே கவிழ்ந்து விழுந்தது. இதில் லாரிக்குள் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாதா திருடன் தெரியும்.. 'ஸ்பைடர்மேன்' திருடன் பத்தி உங்களுக்குத் தெரியுமா?
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக மீட்பு படையினர் விரைந்து சென்று லாரியில் சிக்கி கொண்டிருந்த சடலங்களை மீட்டனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 25 பேர் விபத்தினால் மரணடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.