மும்பை தவிர்த்து பெங்களூர், டெல்லியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம்: ஹெட்லி
நியூயார்க்: மும்பை தாக்குதலில் தொடர்புடைய சஜித் மிர் கற்பனை நபர் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில் அவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அடையாளம் காட்டியுள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று தொடர்ந்து 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

மேஜர் பாஷா
இந்தியாவில் ஆட்களை சேர்க்குமாறு கூறிய மேஜர் பாஷா பாகிஸ்தானின் 6வது பலோச் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர். மேஜர் பாஷா பின்னர் லஷ்கர் இ தொய்பாவிலும் அதன் பிறகு அல் கொய்தாவிலும் சேர்ந்தார்.

சஜித் மிர்
அபு அல் காமா, சஜித் மிர், அப்துல் ரஹ்மான் பாஷா ஆகியோரை நான் அடையாளம் காட்டியுள்ளேன். (சஜித் மிர் புகைப்படத்தை காண்பித்ததும் இவர் தான் என அடையாளம் காட்டினார் ஹெட்லி. இதன் மூலம் சஜித் மிர் கற்பனை நபர் என்று பாகிஸ்தான் கூறி வந்தது பொய் என்று தெரிய வந்துள்ளது.)

ஐஎஸ்ஐ
லஷ்கர் இ தொய்பாவை ஐஎஸ்ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒவ்வொரு முறை மும்பை சென்று வந்த பிறகு ஐஎஸ்ஐக்கு பிரத்யேக அறிக்கை அளித்தேன்.

பெங்களூர்
பெங்களூர் மற்றும் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அவர்கள் எதற்காக மும்பையை குறி வைத்தார்கள் என எனக்கு தெரியவில்லை.












Click it and Unblock the Notifications