270 பேர் பலியான இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: மாஜி அமைச்சர் பிள்ளையான் அதிரடி கைது-தமிழர்கள் கொண்டாட்டம்!
கொழும்பு: இலங்கையில் 2019-ம் ஆண்டு 275 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தின தற்கொலைப் படை தாக்குதல்கள் மற்றும் இலங்கை தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை ஆகிய வழக்குகளில் இலங்கை முன்னாள் இணை அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர் பிள்ளையான். பின்னர் கருணாவுடன் இணைந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் கருணா-பிள்ளையான் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியையும் நடத்தினார் பிள்ளையான்.

2008-ம் ஆண்டு இலங்கை கிழக்கு மாகாண முதல்வராகவும் பதவி வகித்தார் பிள்ளையான். முன்னாள் தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்து போட்டியிட்டு எம்பியானார் பிள்ளையான். அப்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அண்மையில் கருணாவுடன் இணைந்து செயல்படுவதாக பிள்ளையான் அறிவித்தார். கருணாவும் பிள்ளையானும் கூட்டாக அறிவித்த சில நாட்களிலேயே பிள்ளையான் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 270 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications