மளமளவென்று உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தோனேசியாவில் 373 பேர் பலி.. சுனாமியின் கோர தாண்டவம்!
இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர்.
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த வருடம் மிக மோசமான வடுக்களுடன் இந்தோனேசியாவிற்கு முடிய போகிறது. 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு நிகரான சுனாமி ஒன்று தற்போது இந்தோனேசியாவை தாக்கி உள்ளது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்கு பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்களை மீட்க முடியாமல் அரசும் திணறி வருகிறது.

சுனாமி ஏற்பட்டது
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை யாருமே நினைக்காத நேரத்தில் இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் கடல் அலை பல மீட்டர் உயரம் எழும்பியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமலே அந்த பகுதியை இந்த சுனாமி தாக்கி உள்ளது. மொத்தமாக கடல் ஊருக்குள் வந்தது.

வெடித்த எரிமலை
சனிக்கிழமை இரவே இந்தோனேசியாவில் உள்ள கரகட்டாவ் எரிமலை வெடிக்க தொடங்கியது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாகத்தான் இந்த பெரும் சுனாமியே ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் நில அடுக்கு நகர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்த மோசமான சுனாமியை தாக்கி உள்ளது.

மோசமான சேதம்
இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இங்கு இருக்கும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இதனால் நீரில் மூழ்கி உள்ளது. 1.5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை
தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர். 2000 பேர் காயமடைந்துள்ளனர். 1200க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications