இந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி!
இந்தோனேசியாவின் பிஞ்சாய் நகரில் இயங்கி வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணியாளர்கள் வேலைக்கு சென்றனர்.
அப்போது திடீரென தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் தீப்பெட்டி தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றியது.

அலறிய தொழிலாளர்கள்
தீப்பெட்டி தயாரிப்பதற்கான மருந்தில் தீப்பற்றியதால் தீ அசுர வேகத்தில் பரவியது. இதனால் செய்வதறியாது திணறிய தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

போராடிய தீயணைப்புத்துறை
ஆனாலும் தீயின் வேகத்திற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்க போராடினர்.

சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி
இருப்பினும் தீயின் கோர நாக்குகளுக்கு 30 பேர் இரையாயினர். அவர்களில் 3 சிறுவர்களும் உடல்கருகி உயிரிழந்திருந்தது சோகத்தின் உச்சம்.

கரிக்கட்டையான உடல்கள்
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டையாக காட்சியளித்தது. வேலைக்கு வந்தவர்கள் தங்களின் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்ததே மூன்று சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதற்கு முன் நிகழ்ந்த தீ விபத்துகள்
ஜகார்த்தாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடித் தொழற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். சுலேவேசி தீவில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியாயினர், 2009ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications