For Daily Alerts
Just In
எகிப்தில் முகமூடி அணிந்த நபர்களால் 4 போலீசார் சுட்டுக்கொலை.. ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
கெய்ரோ: எகிப்தில் போலீஸ்காரர்கள் நால்வரை சுட்டு கொன்றதற்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தெற்கு கெய்ரோ பகுதியில், நெடுஞ்சாலை ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் நான்கு போலீசார் கொல்லப்பட்டனர்.
கொலையாளிகள் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தனது சமூக வலைத்தள வெப்சைட்டுகளில் ஒரு தகவலை ஷேர் செய்துள்ளது. அதில் "நாங்கள் காத்திருக்கிறோம் என்பது ராணுத்தினருக்கு தெரியட்டும். எங்கள் கண் இமைகள் துடிக்கும்வரை, அவர்கள் உயிரோடு இருக்க முடியாது. அல்லா அனுமதித்தால்" என தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக, இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Masked gunmen on a motorcycle killed four Egyptian policemen south of Cairo Saturday, the interior ministry said, in an attack claimed by the Islamic State group.
Story first published: Sunday, November 29, 2015, 13:56 [IST]