லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 2 இந்தியர் விடுதலை! 2 பேரின் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

திரிபாலி: லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 இந்தியர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

ஈராக், சிரியா, லிபியாவில் உலகின் மிக கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கை ஓங்கி இருக்கிறது. ஏற்கனவே 39 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர்.

4 Indians abducted by ISIS in Libya

அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும் 39 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. இதேபோல் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

இந்த பிணையக் கைதிகளை விடுதலை செய்வதற்கு பெரும் தொகை பணத்தைக் கேட்பதும் அப்படி தர மறுத்தால் கைதிகளை மிகவும் கோரமாக கொலை செய்வதும் இந்த தீவிரவாத கும்பலின் வாடிக்கை.

இந்த நிலையில் லிபியாவின் திரிபோலி அருகே உள்ள சிர்டி என்ற நகரில் இருந்து 4 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இவர்கள் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட 4 இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இவர்களில் 2 பேர் கர்நாடகா, 2 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடத்தப்பட்டோரில் 2 பேரை தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எஞ்சிய 2 பேரின் நிலை குறித்து தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்களை சேகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+