ஹஜ்: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு
மினா: மெக்கா ஹஜ் யாத்திரையில் மினா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் ஜார்க்கண்ட், ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணம் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். மெக்கா அருகேயுள்ள மினாவில் ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்தனர். 863 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோருக்கு அருகே உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நெரிசலில் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 தமிழர் உட்பட 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்களில் 9 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் ஜார்க்கண்ட்; ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
உயிரிழந்த இந்தியர்கள் விவரம்:
1) சம்சுதீன் முகமது, தமிழ்நாடு (பாஸ்போர்ட் எண்: (G6849546)
2) மொகிதீன் பிச்சை, தமிழ்நாடு (பாஸ்போர்ட் எண்:( J5669393)
3) முகமது ருஷ்தம் அலி, ஜார்க்கண்ட்
4) நியாசுல் ஹக் மன்சூருல் ஹக், ஜார்க்கண்ட்
5) சலீம் யூசுப் சேக், மகாராஷ்டிரா
6) முகமது ஹனீப் ஹசன் பாய் சேக், குஜராத்
7) சேக் மதினாபீபி முகமது, குஜராத்
8) திவான் அயூப்ஷா, குஜராத்
9) திவான் ஜூபேதாபீபீ, குஜராத்
10) சோடா ரெஹ்மத் ஹூசாம், குஜராத்
11) பெதாரா பாட்மாபென் கரீம், குஜராத்
12) போலிம் ஹாவ்பாய் இசாக், குஜராத்
13) நகோரி ஜோராபீபி, குஜராத்
14) நகோரி ருக்ஷானா முகமது இசாக், குஜராத்
சம்சுதீன்
மினா நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழரான சம்சுதீன், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் 13 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ஹஜ் யாத்திரை நெரிசலில் மயிலாடுதுறை சம்சுதீன், தென்காசி முகதீன் பிச்சை, திருச்சி ரெஜிமன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications