காபூல் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்... 4 பேர் பலி
காபூல் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். அதில்,100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
காபூல்: ஆப்கானில் மஷார் இ-ஜெரீப் நகரத்தில் செயல்பட்டு வரும் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் வியாழனன்று இரவு 11 மணி அளவில் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பால்ஹ் மாகாண காவல்துறை தலைவர் செய்யது கமல் கூறியதாவது: ஜெர்மன் தூதரக வாயிலில் வெடிகுண்டு நிரப்பிய கார் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் குடியிருப்பு வாசிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில், படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மன் தூதரக தாக்குதலுக்கு ஆப்கான் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் குண்டுஸ் நகரில் அண்டை நாட்டினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி குண்டுஸ் நகருக்கு அருகில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நேட்டோ படைகள் தொடர் விமானத் தாக்குதல் நடத்தின. முன்னதாக ஆப்கான் மற்றும் வெளிநாட்டு படைகள் இணைந்து தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டன.
ஆப்கானில் ஜெர்மன் வீரர்கள் 1 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பால்ஹ் மாகாணத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications