ஒன்றல்ல, நான்கு வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள்.... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா: சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் இதுவரை நான்கு வகையான உருமாறிய கொரோனா வகைகள் உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவியது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றைப் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இந்த உருமாறிய கொரோனா வகை வேகமாகப் பரவும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றல்ல... நான்கு
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் உலகெங்கும் பல அசாதாரண சுகாதார பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது உலகில் நான்கு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

முதல் உருமாறிய கொரோனா
கடந்த ஜனவரி மாத இறுதியில் D614G என்ற மரபணு மாற்றத்தோடு முதல் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வகையைக் காட்டிலும், இந்த வகை கொரோனா வைரசே கடந்த ஜூன் மாதம் முதல் உலகெங்கும் அதிகளவில் பரவ தொடங்கியது. இந்த வகை கொரோனா முன்பு இருந்ததைவிட வேகமாகப் பரவும் என்றாலும்கூட இவை கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கிளஸ்டர் 5
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர் காலகட்டத்தில் மூன்றாவது வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. "கிளஸ்டர் 5" என்று அழைக்கப்படும் இந்த உருமாறிய கொரோனா வகை டென்மார்க் மற்றும் வடக்கு ஜட்லாண்ட் ஆகிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டன. இந்த வகை கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலில் ஏற்படுத்தும் மாற்றம் காரணமாக மனிதர்களில் உடலில் இயற்கையாக உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். கடந்த செப்டம்பர் மாதம் வரை, உலகெங்கும் வெறும் 12 பேருக்கு மட்டுமே இந்த "கிளஸ்டர் 5" வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் வகை கொரோனா
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி, மற்றொரு உருமாறிய கொரோனா வகை பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த வகை கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. தற்போதுவரை இந்த புதிய உருமாறிய கொரோனா வகை 31 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க வகை கொரோனா
இதேகாலகட்டத்தில், டிசம்பர் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்க நாட்டில் மற்றொரு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இது பிரிட்டனில் கண்டறியப்பட்ட வகையாக இருக்கும் என்றே முதலில் ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் பரவுவது மற்றொரு புதிய வகை கொரோனா என்பதை ஆராய்ச்சியாளர்கள் பின்னரே கண்டறிந்தனர். தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் இந்தப் புதிய கொரோனா வகை பரவுகிறது. தென் ஆப்பிரிக்க வகை கொரோனா இதுவரை நான்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி பலனளிக்குமா
இந்த உருமாறிய கொரோனா வைரஸ்கள் மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் என்றாலும் இவை வைரஸ் பாதிப்புகளை அதிகப்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உருமாறிய கொரோனாக்கதளில் வெறும் மிகச் சில மாற்றங்களே இருக்கும் என்பதால் தடுப்பூசிகள் அனைத்தும் இவற்றுக்கு எதிராகப் பலனளிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications