விளையாட்டு விபரீதமானது... 4 வயது சிறுமி சுட்டதில் சகோதரன் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் விளையாட்டுத் தனமாக 4 வயது சிறுமி நிஜ துப்பாக்கியால் சுட்டதில், அவளது சமவயது சகோதரன் பரிதாபமாகப் பலியானான்.
அமெரிக்காவின் மிச்ஹிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன், சமவயதுள்ள தனது சித்தப்பா மகளுடன் நேற்று ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறுவன் மறைந்து கொள்ள, சிறுமி அவனை தேடி வந்துள்ளாள். கட்டிலுக்கு அருகே சிறுவன் ஒளிந்திருப்பதைப் பார்த்த சிறுமி, கட்டிலின் அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டுத் தனமாக ‘ஹேண்ட்ஸ் அப்' சொல்லியுள்ளாள்.
ஆனால், தவறுதலாக அவளது கை துப்பாக்கியின் டிரிக்கை அழுத்தி விட, பாய்ந்து வந்த குண்டு பாய்ந்து சிறுவன் பரிதாபமாகப் பலியானான்.
கவனக்குறைவாக, எளிதில் குழந்தைகளின் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கியை வைத்திருந்ததே இத்தகைய துயர சம்பவம் நடைபெறக் காரணம் என குற்றம் சாட்டிய அந்நகர செய்தியாளர்கள், இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என டெட்ராய்ட் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் அடம் மடேராவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.