நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி
காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை, 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேரை காணவில்லை என்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இமயமலை பகுதியின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியிலும், அதன் தெற்கு சமவெளிகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தின் தாழ்வான பகுதிகளை பெரு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரம் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர். மழை நீர் சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கிழக்கு நேபாளத்தில் பாயும் கோசி நதியில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேபாளத்தில் உள்ள மகோத்தரி பகுதியில் இருக்கும் முக்கிய நெடுஞ்சாலை பாலம் பலத்த சேதமடைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடயே எதிர்வரும் நாட்களில் இன்னும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நேபாள வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 100 மி.மீ வரை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் இன்னும் கவனமுடன் இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் தற்போது கொட்டி தீர்த்து வரும் கனமழை பற்றி கவலை தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை, மழைக்கால முறைகளில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளதால் எதிர்காலத்தில் கடுமையான வறட்சி அல்லது இன்னும் அதி தீவிர மழை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நேபாளம் தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications