மெக்சிகோவில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

மெக்சிகோவின் மலைப் பகுதியான குரெரோ மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மண்சரிவில் ஒரு பெரிய நகரமே மண்ணுக்குள் புதைந்து விட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் அதே பகுதியில் நேற்று தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி, காலை 9 லிருந்து 10.36 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நில நடுக்கங்கள் உணரப்பட்டன.
இவற்றில் 5.21 ரிக்டர் அளவில் பதிவானது தான் பலமான நிலநடுக்கம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுற்றுலா மையமான அகபல்கோ நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications