பெற்ற மகளையும், 6 பேரக்குழந்தைகளையும் சுட்டுக் கொன்று அமெரிக்க முதியவர் தானும் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

புளோரிடா: அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பெற்ற மகளையும், 6 பேரைக்குழந்தைகளையும் சுற்றுக் கொண்டுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கில்கிறிஸ்ட் பகுதியில் உள்ள பெல் என்ற இடத்தை சேர்ந்தவர் டான் சார்லஸ் ஸ்பிரிட்.

இவரது வீட்டில் அவரது மகள் மற்றும் 6 பேரக்குழந்தைகள் தங்கியிருந்தனர்.

பேரக்குழந்தைகளைக் கொலை:

அவர்களை டான் சார்லஸ் ஸ்பிரிட் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றார்.

குட்டிக் குழந்தைகள்:

கொல்லப்பட்ட குழந்தைகள் 3 மாதம் முதல் 10 வயது வரையிலானவர்கள் ஆவர்.

தானும் தற்கொலை:

இவர்களை கொன்ற சிறிது நேரத்தில் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை கில்கிறிஸ்ட் நகர ஷெரீப் ராபர்ட் ஸ்கவுல்ட்ஷ் தெரிவித்தார்.

கொடூரச் செயல்:

"எதற்காக இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டார் என தெரியவில்லை. அது போன்று நான் எங்கும் பார்த்ததில்லை" என்றார் ஷெரீப் ராபர்ட்.

முன்னாள் குற்றவாளி:

7 பேரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட ஸ்பிரிட் முன்னாள் குற்றவாளி ஆவார். ஏற்கனவே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தண்டனை பெற்றவர். கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலையானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+