வனுவாட்டுவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
ஹாங்காங்: பசிபிக் நாடான வனுவாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் நாடான வனுவாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் போர்ட் விலாவில் இருந்து 209 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதோ அங்கிருந்து 300 கிலோமீட்டர் தூரம் வரை பயங்கர சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் வனுவாட்டு அமைந்துள்ளது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவுக்கு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications