பயங்கரம்.. காவல்நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு.. 8 போலீஸார் உடல் சிதறி பலி - அலறும் நைஜீரியா
நைஜீரியா அதிபர் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தவிட மாட்டோம் என பல கிளர்ச்சி அமைப்புகள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளன.
அபுஜா: நைஜீரியாவில் 2 காவல்நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர்.
நைஜீரியாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு கிளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுறுத்தும் கிளர்ச்சி அமைப்புகள்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியா, கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே அங்கு பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நைஜீரியாவின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தனிநாடு கோரி 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு கிளர்ச்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.

தொடரும் ரத்தப் பலி
இந்த கிளர்ச்சி அமைப்புகள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்தக் கிளர்ச்சி அமைப்புகள் அவைகளுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும். மேலும், தங்கள் பேச்சுக்கு கட்டுப்படாத பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும். இதுபோன்ற தாக்குதல்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வெடிகுண்டு வீச்சு
இந்நிலையில், நைஜீரியா அதிபர் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தவிட மாட்டோம் என பல கிளர்ச்சி அமைப்புகள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளன. இந்த சூழலில், நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாரா மாகாணத்தில் அமைந்துள்ள 2 காவல் நிலையங்கள் மீது மர்மநபர்கள் நேற்று முன்தினம் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

8 போலீஸார் பலி
இந்த பயங்கர தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். காயமடைந்த போலீஸார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, பியாப்ரா பழங்குடி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கும் கிளர்ச்சி அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக நைஜீரியா உளவுத்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகி உள்ளவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications