ஹஜ் புனித பயணம் சென்ற இந்தியர்கள் 98 பேர் மரணம்.. மெக்கா வெயில் கடுமைக்கு காரணம் என்ன தெரியுமா?
துபாய்: ஹஜ் பயணத்திற்காக மெக்கா சென்ற 98 இந்தியர்கள் இவ்வாண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு 1.75 லட்சம் இந்தியர்கள் புனித பயணம் மேற்கொண்டபோதிலும், இந்த மரண சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனைத்து மரணங்களும் வானிலை சார்ந்த இயற்கையான காரணங்களால் ஏற்பட்டவை.
கடுமையான வெப்பம் மற்றும் அதனால் உடலில் ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக மரணங்கள் நிகழ்ந்ததாக தெரிகிறது. பெங்களூரைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கவுசர் ருக்சானா (69) மற்றும் அப்துல் அன்சாரி (54) மரணமடைந்ததாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கர்நாடக மாநில ஹஜ் கமிட்டி நிர்வாக அதிகாரி எஸ் சர்பராஸ் கான், மெக்காவிற்கு அருகிலுள்ள மினா பள்ளத்தாக்கில் ராமி அல்-ஜமாரத் சடங்கின் போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சடங்கு நெரிசல் காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன இருப்பினும் சவுதி அரேபியா கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவின் மெக்காவில் இந்த புனித யாத்திரை சீசனில் 1000க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். இப்பகுதி கோடையில் மட்டுமல்ல, குளிர்கால மாதங்களிலும் கடுமையான வெப்பத்தை கொண்டுள்ளது. இதற்கு மெக்காவின் புவியியல் அமைப்பே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏழு மலைகளால் சூழப்பட்ட மெக்கா, கடல் மட்டத்திலிருந்து வெறும் 909 அடி உயரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு பகுதியாகும்.
சுற்றியுள்ள மலைகள் வடக்கிலிருந்து குளிர்ந்த காற்றை வரவிடாமல் தடுக்கின்றன, இதனால் வெப்ப அலை வெளியேறுவதில்லை. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ள மக்காவின் குறைந்தபட்ச உயரம், அதன் வெப்பத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த ஆண்டு, உயிரிழந்த ஹஜ் யாத்ரீகர்களில் பெரும்பாலானோர் எகிப்தை சேர்ந்தவர்கள். எகிப்து, ஜோர்டான், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள முடியவில்லை. ஜோர்டானின் பெரும் பகுதிகளில் கோடையிலேயே வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். மெக்காவிலுள்ள 50 டிகிரி வெயிலை அவர்களால் தாங்க முடியவில்லை.
இறந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள். 60 பேர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர். எகிப்தைச் சேர்ந்தவர்களின் மரணங்கள் அனைத்தும் வெப்பத்தால் ஏற்பட்டவை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தோனேசியா, ஈரான், செனகல் மற்றும் துனிசியா போன்ற பிற நாடுகளும் இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன.
மெக்காவின் கடுமையான காலநிலை உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களுக்கு தொடர்ந்து சவால்களை ஏற்படுத்துகிறது. யாத்ரீகர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்தாலும், தண்ணீர் தெளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டேதான் உள்ளன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications