உடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்... பள்ளி மாணவனின் உயிரை காப்பற்ற வித்தியாசமான சிகிச்சை
சிரியாவில் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுவனின் மொத்த தோலும் மாற்றப்பட்டு சாதனை செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

ரோம்: சிரியாவில் பள்ளி சிறுவன் ஒருவன் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றினால் பல நாட்களாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். அவனுக்கு உடல் முழுக்க தோல் உரியும் வித்தியாசமான நோய் ஒன்று இருந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்துவிடுவான் என அவன் பெற்றோர் நினைத்து இருந்த சமயத்தில் வித்தியாசமாக காப்பற்றப்பட்டு இருக்கிறான்.
இதற்காக இத்தாலியை சேர்ந்த மருத்துவர்கள் அவனது உடலின் தோலை மாற்றி இருக்கின்றனர். கிட்டத்தட்ட உடலில் இருக்கும் மொத்த தோலையும் எடுத்துவிட்டு புதிய தோல் கொடுத்துள்ளனர்.

புதிய நோய்
சிரியாவை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் ஒருவன் கொடிய நோய் ஒன்றால் கடந்த 4 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். 'ஜங்சனால் எபிடர்மோல்சிஸ் புலோசா' என்ற இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இவனுக்கு உடலில் தோல் உறிந்து இருக்கிறது. லேசாக யாராவது தொட்டால் கூட தோல் உறிந்து ரத்தம் வந்தது உள்ளது.

மரணம் அடைய வாய்ப்பு
இந்த நிலையில் சிரியாவில் இருந்த டாக்டர்கள் அவனை நான்கு வருடமாக மிகவும் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டனர். பல மருத்துவ முறைகளை முயற்சித்தும் அவனுக்கு நோய் சரியாகவில்லை. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் அவன் மரணம் அடைந்து விடுவான் என்று கூறியிருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அவன் மரணம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தனர்.

இத்தாலி கொண்டு சென்றனர்
இந்த நிலையில் சிரியாவில் இருந்த அந்த சிறுவனை அவனது பெற்றோர் இத்தாலி கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு புதிய தோல் பொருத்தும் முயற்சியில் இறங்கி டாக்டர்கள் இறங்கினர். முதலில் அவனது தந்தையின் தோலை எடுத்து அவனது உடலில் போர்த்தலாம் என முயற்சி செய்து இருக்கின்றனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்து இருக்கிறது.

மருத்துவர்கள் புதிய சாதனை
இதையடுத்து அவர்கள் சில நாட்களுக்கு முன் செயற்கை தோல் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் உதவியை நாடினர். அதன்படி அவனுக்கு புதிதாக செயற்கை தோல் தயாரிக்கப்பட்டது. அந்த செயற்கை தொல் பொருத்தும் பணி மருத்துவர்களால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தற்போது அந்த சிறுவன் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவன் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications