இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா வைரஸ்.. உள்நாட்டு அவசரநிலை கொண்டு வர முடிவு?!
இஸ்ரேல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கொரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் பரவும் பி.1.1.529 வகை கொரோனா காரணமாக கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.
முதலில் பிரிட்டோரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள், ஸ்வானே மெட்ரோ நகரம் ஆகியபகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன்பின் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.

புதிய வகை வைரஸ்
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும், உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிகமான உருமாற்றத்தை அடைகிறதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, ஹாங்காங் சென்ற பயணிகள் உடலில் இந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிலும் பாதிப்பு
புதிய வகை வைரஸ் தாக்கத்தால் பல நாடுகள் மீண்டும் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வர தடை, கட்டுப்பாடுகள் என விதித்து வருகின்றனர். பல நாடுகளில் புதிய வகை வைரஸின் தாக்கம் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இஸ்ரேலிலும் பரவியுள்ளது.

3 பேர் பாதிப்பு
சமீபத்தில் ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து இஸ்ரேல் வந்த பயணி ஒருவரிடம் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேறு இருவருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. மூவருமே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மூவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Recommended Video

தடுப்பூசி
உலகிலேயே இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் அங்கு தற்போது மூன்று பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வரைஸ் பரவியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications