இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா வைரஸ்.. உள்நாட்டு அவசரநிலை கொண்டு வர முடிவு?!
இஸ்ரேல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கொரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் பரவும் பி.1.1.529 வகை கொரோனா காரணமாக கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.
முதலில் பிரிட்டோரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள், ஸ்வானே மெட்ரோ நகரம் ஆகியபகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன்பின் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.

புதிய வகை வைரஸ்
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும், உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிகமான உருமாற்றத்தை அடைகிறதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, ஹாங்காங் சென்ற பயணிகள் உடலில் இந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிலும் பாதிப்பு
புதிய வகை வைரஸ் தாக்கத்தால் பல நாடுகள் மீண்டும் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வர தடை, கட்டுப்பாடுகள் என விதித்து வருகின்றனர். பல நாடுகளில் புதிய வகை வைரஸின் தாக்கம் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இஸ்ரேலிலும் பரவியுள்ளது.

3 பேர் பாதிப்பு
சமீபத்தில் ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து இஸ்ரேல் வந்த பயணி ஒருவரிடம் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேறு இருவருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. மூவருமே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மூவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Recommended Video

தடுப்பூசி
உலகிலேயே இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் அங்கு தற்போது மூன்று பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வரைஸ் பரவியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications