8, 10 வயசு குழந்தைகளை இரக்கமின்றி விறகு கட்டையால் அடித்து கொன்ற சித்தப்பா.. சைக்கோவா என விசாரணை!
குண்டூர்: ஆந்திரா மாநிலத்தில் வீட்டில் விளையாடி வந்த இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்துக்கொன்ற கொடூர சைக்கோவின் அதிர்ச்சி செயல் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சாப்ரோல் மண்டலம், வேஜண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோடேஸ்வர ராவ். இவர், ரெபெல்லே கிராமத்தை சேர்ந்த உமாதேவியை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வேலை செய்து அங்கேயே வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு பார்த்திவ் சஹஸ்வத் (10), ரோஹித் தஷ்வின் (8) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கோடேஸ்வர ராவ் தனது சொந்த ஊரான வேஜண்ட்லா கிராமத்திற்கு வந்துள்ளனர்.

உமாதேவி
இந்தநிலையில் வேஜண்ட்லா கிராமத்திலிருந்து உமாதேவியின் சொந்த ஊரான ரெபெல்லா கிராமத்திற்கு சென்றுள்ளனர். கோடேஸ்வர ராவ், உமாதேவி மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட இரண்டு மகன்கள் மட்டும் வீட்டில் விளையாடி வந்துள்ளனர்.

சிகிச்சை
அண்மையில் சில தினங்களாக உமாதேவியின் தங்கை கணவர் சீனிவாச ராவ் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்து வருவதாக சொல்லப்படும் நிலையில் சீனிவாச ராவ், கோடேஸ்வர ராவின் இரண்டு மகன்களையும் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு தாழிட்டுக் கொண்டு கட்டை, விறகு உள்ளிட்டவைகளால் சைக்கோவை போல் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்துள்ளார்.

சரண்
இதையடுத்து ஒன்றும் அறிந்திடாத பிஞ்சுகள் இரண்டும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் சீனிவாச ராவ் அருகே உள்ள காவல் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார். சீனிவாச ராவ் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்கிற கோணத்தில் போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சோகம்
ஒன்றும் அறியாத சிறு குழந்தைகள் உடல் உறுப்புகளில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்களுக்குள் இருக்கும் தகராறை வைத்துக் கொண்டு இந்த கொலை நிகழ்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications