பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல்.. ஏலியனா என ஆராய 650 கோடி கொடுக்கும் தொழிலதிபர்
பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்.
Recommended Video

மாஸ்கோ: பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த விண்கல் சரியாக ஒரு வாரத்திற்கு முன் பூமிக்கு அருகில் வந்தது.
இன்னும் இந்த விண்கல் பூமியை முழுதாக தாண்டி செல்லாத நிலையில் தற்போது இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய அந்த ரஷ்ய தொழிலதிபர் முடிவு செய்து இருக்கிறார்.
அந்த விண்கலத்தில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.

வித்தியாசமான விண்கல்
சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருக்கிறது.

ஆராய்ச்சி
இந்த நிலையில் இந்த விண்கலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன்படி இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு 'ஒமுஅவுமா' என்று பெயர் வைத்தார்கள். மேலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கினார்கள். மேலும் இந்த விண்கல் இன்னும் சில தினங்களில் மொத்தமாக பூமியை கடந்து சென்றுவிடும் என்பதால் இதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

என்ன இருக்கிறது
தற்போது அதன் உள்ளே ஏலியன் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் 'யூரி மில்னர்' 650 கோடி பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்த இருக்கிறார். அதன்படி 30க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இந்த விண்கலம் பூமியை கடந்து செல்வதற்கு முன் அதை ஆராய்ச்சி செய்து முடித்து இருப்பார்கள். அதற்குள் ஏலியன் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த முயற்சி செய்யப்படுகிறது.

எப்படி ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சிக்காக அந்த விண்கலத்திற்கு சில சிக்னல்கள் அனுப்பப்படும். அந்த சிக்னல்களுக்கு பதில் வரும் பட்சத்தில் அதற்குள் ஏலியன் இருப்பது உறுதியாகும். ஆனாலும் இந்த ஆராய்ச்சி தேவையில்லாத செலவு என்றும் ரஷ்யாவை சேர்ந்த அறிஞர்கள் சிலர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications