பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை மையமாக கொண்டு நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சுமார் 25 பேர் அங்கு பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு நேற்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 400 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் பலத்த காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் ஜீலம் நதிக்கு வடக்கே 22.3 கிலோமீட்டர் தொலைவில், பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றைப் பிரிக்கும் எல்லையில் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"நிலநடுக்கம் 10 கி.மீ பரப்புக்கு மையம் கொண்டிருந்தது. பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளிலும் கைபர் பக்துன்க்வாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டது. இருப்பினும், மிக மோசமான பாதிப்பு காஷ்மீரின் (ஆக்கிரமிப்பு) மீர்பூர் மாவட்டத்தில்தான் "என்று பாகிஸ்தானின் தலைமை வானிலை ஆய்வாளர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.
Really strong earthquake near Mirpur AK pic.twitter.com/k06e4p051Y
— Usman Majeed (@UBMajeed) September 24, 2019
ஜீலம் நதியின் அருகே பூகம்பத்தின் மையப்பகுதி இருந்ததால், அது ஜட்லான் மற்றும் காரி ஷெரீப் நடுவேயான பகுதிகளில், பேரழிவை ஏற்படுத்தியதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை சேதமடைந்துள்ளதாகவும் மிர்பூர் பிரதேச ஆணையாளர் முகமது தயாப் தெரிவித்தார்.
மிர்பூரில் உள்ள தலைமையக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அல்லது 12 பேர் இறந்துவிட்டதாக அவர் கூறினார், அதே நேரத்தில் 13 பேர் ஜட்லான் மற்றும் காரி ஷெரீப் இடையே வெவ்வேறு கிராமங்களில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 150 பேர் டி.எச்.க்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். பலர் மேல் சிகிச்சைக்காக, ராவல்பிண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிராமப்புறங்களில் மொபைல் போன், தொலைபேசி சேவை மற்றும் மின்சாரம் வழங்குவது துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் அருகிலுள்ளவர்களுக்கு தகவல் கொடுக்கவோ, உதவி பெறவோ முடியவில்லை.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications