அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு..8 பேர் படுகாயம்.. சுட்டவரும் கொல்லப்பட்டார்
ஓஹியோ மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கொலம்பஸ்: அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் தலைநகர் கொலம்பஸ். இங்கு பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மர்மநபர் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications