ஐந்து மனைவிகளால் 'பலாத்காரம்' செய்யப்பட்ட தொழிலதிபர் படுக்கையிலேயே பரிதாப சாவு
அபுஜா: ஐந்து மனைவிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி 'பலாத்காரம்' செய்யப்பட்ட நைஜீரிய தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர் உரோகோ ஓனோஜா. தொழிலதிபரான இவருக்கு மொத்தம் ஆறு மனைவிகள். சம்பவத்தன்று இரவு உக்புகு நகரிலுள்ள ஒரு மது பாரில் இரவு முழுக்க நன்கு குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவருக்கு தனது கடைசி மனைவியுடன் உடலுறவு செய்யும் வேட்கை தோன்றியுள்ளது. இதையடுத்து இளம் மனைவியை மாஸ்டர் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளார். கடைசி மனைவியை மட்டும் தனி பெட்ரூமுக்கு உரோகோ அழைத்து செல்வதை மற்றொரு மனைவி பார்த்துவிட்டார்.
கணவனுக்கு அடி, உதை
அவர் பிற மனைவிகளையும் தட்டி எழுப்பி, உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். தங்களது கையில் இருந்த உருட்டுக்கட்டைகளால் உரோகோவை அடித்துள்ளனர்.
எங்களுடனும் வேண்டும்..
அதெப்படி கடைசி மனைவிக்கு மட்டும் நீங்கள் சிறப்பு 'சலுகை' தரலாம். அடிக்கடி அவருடன் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற ரேஞ்சுக்கு திட்டி தீர்த்துள்ளனர். இதன்பிறகு கத்தியை காண்பித்து மிரட்டி, மரியாதையாக எங்கள் அனைவருடனும் உறவு வைத்து, நாங்கள் அனைவரும் சமம்தான் என்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உறவால் மரணம்
இந்த எதிர்பாராத அதிரடியால் மிரண்டு போன உரோகோ, மனைவிமார்களின் கோரிக்கைக்கு சம்மதித்தார். இதன்பிறகு ஐந்து மனைவிகளுடனும், ஒவ்வொருவராக உறவு வைக்க ஆரம்பித்துள்ளார். நான்கு மனைவிகளுடன் உறவு வைத்து முடித்ததும், உரோகோ திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
மனைவிகள் தப்பியோட்டம்
அடுத்தடுத்து உடலுறவு வைத்ததால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன் இறந்ததும், கடைசி மனைவியை தவிர பிற மனைவிகள் அருகேயுள்ள காடுகளுக்குள் தப்பியோடிவிட்டனர்.
பலாத்காரம், கொலை வழக்குகள்
இந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 மனைவிகளை கைது செய்தனர். அவர்கள் மீது பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவன் மீதான மனைவிகளின் போட்டி அவரின் உயிரையே பறித்து விட்ட சம்பவம் நைஜீரியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அங்கு சகஜம்
நைஜீரியாவில் ஆண், பலதார மணம் செய்வதும், ஒரே படுக்கையறையில் கூட்டாக உறவில் ஈடுபடுவதும் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications