‛ஆபரேஷன் இரும்பு வாள்’.. பாலஸ்தீனத்தை பழி தீர்க்கும் இஸ்ரேலின் போர் வியூகம் இதுதான்! பரபர தகவல்
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பாலஸ்தீனத்தின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் ‛ஆபரேஷன் இரும்பு வாள்' என்ற பெயரில் வியூகம் வகுத்து பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது தற்போது பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ள நிலையில் பாலஸ்தீனத்துக்கு எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு உள்ளது.
இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடங்கினர். 5,000 ஏவுகணைகள் மூலம் பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தொடங்கி உள்ளது. ஸ்டேட் ஆப் வார் என அறிவித்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துகிறது. மேலும் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' (Operation Iron Swords) என பெயர் வைத்துள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.
இதுபற்றி இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛தற்போதைய தாக்குதல் என்பது பாராகிளைடர்கள் மூலமாகவும், கடல் வழியாகவும், தரை வழியாகவும் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதலாகும். இப்போது நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்க போராடுகிறோம். காசா பகுதியைச் சுற்றியுள்ள சில இடங்களில் நாங்கள் சண்டையிட்டு வருகிறோம் " என்றார்.
இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய மெசேஜ் அனுப்பி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛நம் நாடு இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறும். நாம் போரில் இருக்கிறோம். இதில் வெற்றி பெறுவோம். இந்த மோதலுக்காக நம் எதிரிகள் அவர்கள் நினைக்காத வகையிலான விளைவுகளை எதிர்கொள்வார்கள்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications