Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசாவில் போரிட முடியாது.. இஸ்ரேல் வீரர்களால் பிரதமர் நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல்! பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இன்னும் இஸ்ரேல் வெற்றி பெறாத நிலையில் அந்த நாட்டு ராணுவ வீரர்கள் காசாவில் போர் புரிய மறுப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ள நிலையில் இஸ்ரேல் வீரர்கள் போர் புரிய மறுப்பது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி உள்ளன. இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம் காலமாக நடந்து வரும் மோதல் தான் காரணமாகும்.

israel palestine benjamin netanyahu

இதற்கிடையே தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் மொத்தம் 1,200 இஸ்ரேலியர்கள் பலியாகினர்.

இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தார். பாலஸ்தீனத்தின் காசா மீது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். அதோடு 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பல நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதனை கேட்காமல் போரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தமட்டில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்த போரை சாதகமாக வைத்து ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்து கட்டிவிட வேண்டும் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

இத்தகைய சூழலில் தான் காசாவில் போர் புரிய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மறுத்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் என்பது இப்போதைக்கு முடியாது என்பதால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்து போரிட மறுப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, ‛‛காசா மீதான தொடர் போரால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்வதால் அவர்கள் நீண்டகால போரை விரும்பவில்லை'' என செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதவிர ஓராண்டை கடந்த போரால் இஸ்ரேலிய வீரர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர். அதோடு மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். இதனால் பல வீரர்கள் மனநலம் மற்றும் உளவியல் ஆலோசனைகளை கேட்பதாகவும், சிலர் மனஉளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதேபோல் இஸ்ரேலில் 80 ஆயிரம் வீரர்கள் ரிசர்வ் முறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தற்போது போரை விரும்பவில்லை. சிலர் தொடர்ந்து 5 மாதம் போரில் ஈடுபட்டு நாடு திரும்பிய பிறகு மீண்டும் போரிட செல்ல மறுக்கின்றனர். இதனால் ஒரு படைக்கு 12 வீரர்கள் இருந்த நிலையில் தற்போது 5 முதல் 7 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இது போரில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் போரை தொடர வேண்டும் என்றால் கூடுதலாக படை வீரர்கள் வேண்டும். ஆனால் தற்போது இஸ்ரேல் நாட்டு படை வீரர்கள் போரிட தயக்கம் காட்டி வருகின்றனர். அதுதவிர புதிதாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை என்பது இஸ்ரேலில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ராணுவ சட்டப்படி அந்த நாட்டை சேர்ந்த யூத மதத்தை சேர்ந்த ஆண்கள் 3 ஆண்டுகளும், யூத பெண்கள் 2 ஆண்டுகளும் ராணுவ சேவையாற்ற வேண்டும். அதேபோல் Bedouin, Druze பிரிவை சேர்ந்த மக்களும் கட்டாயம் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையிலும் 15 சதவீதம் வரை சரிவு என்பது ஏற்பட்டுள்ளது.

இதனால் போருக்கு தேவையான வீரர்கள் இன்றி இஸ்ரேல் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசா மீதான போர் மற்றும் லெபனானின் இருந்து குடைச்சல் தந்த ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராகவும் போரை தொடங்கினர். இதனால் இஸ்ரேல் படை வீரர்கள் இருநாடுகளிலும் குவிக்கப்பட்டனர்.

ஆனால் இன்று அமெரிக்கா, பிரான்ஸ் மத்தியஸ்தம் செய்த நிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் லெபனானில் இருந்து இஸ்ரேல் படை வீரர்கள் இஸ்ரேல் திரும்ப உள்ளனர். இது ஒரு வகையில் ஆறுதலாக இருக்கும் நிலையில் அங்கிருந்து திரும்பும் வீரர்களை மீண்டும் காசாவுக்கு நெதன்யாகு அனுப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+