ரிமோட் கன்ட்ரோலுடன் இயங்கும் ஸ்மார்ட் பூட்டுகள்.... அமேசானில் அறிமுகம்
ரிமோட் கன்ட்ரோலுடன் இயங்கும் ஸ்மார்ட் பூட்டுகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: ரிமோட் கன்ட்ரோல் மற்றும் வீடியோவுடன் இயங்கும் ஸ்மார்ட் பூட்டுகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கொரியர் டெலிவரி பாய்கள் கொடுக்கப்பட்டுள்ள ரகசிய எண்ணை கொண்டு உள்ளே சென்று பொருள்களை வைத்து விடலாம்.
தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நாம் இருந்த இடத்தில் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நாம் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து முக்கியமான கொரியரோ, பொருள்களோ வந்துவிட்டால் சற்று சிக்கல்தான்.

அக்கம்பக்கத்துக்கு வீடுகளில் கொடுத்துவிட சொல்கிறோம். ஆனால் அவர்களும் வீட்டில் இல்லாவிட்டால் எப்படி. ஒரு வீட்டில் 4 பேர் அல்லது 5 பேர் இருந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் பயணித்துவிட்டு வீடுகளுக்கு வருகிறோம். இல்லாவிட்டால் நாம் கிளம்பிய நேரம் பார்த்து நெருங்கிய விருந்தாளி திடீர் சர்பிரைஸாக வந்துவிட்டால் என்ன செய்வது.
பாழாய் போன கேஸ் சிலிண்டர் கூட காசை வைத்துக் கொண்டு காத்திருக்கும் நேரத்தில் வராது. நாம் இல்லாத நேரத்தில்தான் வரும். இந்த கஷ்டங்களை போக்க அமேசான் நிறுவனம் ஸ்மார்ட் லாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு பெயர் அமேசான் கீ ஆகும். சிறிய போன் போல் உள்ள இந்த பூட்டில் ஒரே சமயத்தில் 30 பேருக்கு உண்டான ரகசிய குறியீடுகளை சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தமது வீட்டுக்கு அடிக்கடி வரும் கொரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அவரவருக்கென தனித்தனி எண்களை கொடுத்துவிட வேண்டும்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறியீடுகளை கொண்டு வீட்டை திறந்து கொரியர் பொருள்களை வைத்து விட்டு செல்வர். கார்பென்டிங் வேலை, சில ஆல்ட்ரேஷன் வேலை என ஆள்களை வரவைக்கும்போது அவர்களுக்கான ரகசிய குறியீட்டை கொடுக்கலாம்.
அதேபோல் நண்பர்கள், உறவினர்கள் என வந்திருப்பர். இதுபோல் உங்கள் வீட்டுக்கு யார் வந்தார்கள், சென்றார்கள் என்பது குறித்த விவரங்கள் உங்கள் செல்போனுக்கு வந்துவிடும். பூட்டின் லாக் செய்யும் பகுதி கேஸ் ஸ்டவ்வில் உள்ள திருகு பட்டன் போல் உள்ளது.
இதன் விலை ரூ.12,300 மட்டுமே. இணையதள வசதி, வெப் கேமரா, ஸ்மார்ட் போன் வசதி இருந்தால் போதும். இந்த பூட்டை வாங்கிக் கொள்ளலாம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பூட்டை ரகசிய குறியீட்டுடன் கைரேகையும் வைத்தால் மட்டுமே பூட்டு திறக்கவும் மூடவும் முடியும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications