For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்கத்து வீட்டுக்காரரை கொன்று ஓவன் அடுப்பில் சமைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்து மைக்ரேவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சமைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனைக்கு ஆளான ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (42வயது) என்ற அந்த பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜேம்ஸ் ஷியபருடன் (36வயது) தகராறு செய்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.

இந்த தகராறு காரணமாக ஐஸ் கட்டிகளை எடுக்கப்பயன்படும் கருவியால் அவரது கண்ணுக்குள் குத்திய பின் அவரது கழுத்தை இறுக்கி அவரைப் படுகொலை செய்துள்ளார் ஏஞ்ஜெலா. அதன் பின் ஜேம்ஸின் உடலை துண்டுகளாக வெட்டிய ஏஞ்ஜெலா அவற்றை பாத்திரங்களில் போட்டு ஒவன் அடுப்பில் சமைக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், ஒவன் அடுப்பு சரியாக செயற்பட மறுத்ததால் அவர் தனது இளவயது மகன்களின் உதவியுடன் அவற்றை பைகளில் போட்டு தனது வீட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் வீசிவிட்டார்.

இந்த கொலையை கண்டுபிடித்த போலீசார், ஏஞ்சலாவை கைது செய்து கொல்லப்பட்ட ஜேம்ஸின் உடலை தேடினர். இதில் ஜேம்ஸின் உடலில் இருந்த 206 எலும்புகளில் 56 எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரது தலை இன்னமும் மீட்கப்படவில்லை.

கைது சம்பவத்திற்குப் பின்னர் ஏஞ்ஜெலா தற்கொலைக்கு முயற்சி செய்து போலீசார் காப்பாற்றப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏஞ்சலாவிற்கு புளோரிடா மாநிலத்திலுள்ள வொலுசியா நகர நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுள்ளன.

English summary
A Florida woman convicted of cooking her neighbour after strangling and dismembering him has been sentenced to life in prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X