துபாய் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீனால் இறைவசனங்கள் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் முகமது ரஹ்மதுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ஒறுங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தலைமை தாங்கினார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை நிர்வாக் குழு உறுப்பினர்களான முகம்மது ரஹ்மத்துல்லா, முகம்மது இசாக், ஜாபர் சித்திக், ஜமால் முஹைதீன், ஹமீதுர் ரஹ்மான், காஜா முஹைதீன், பைரோஸ்கான், ஹாஜி இபுராஹிம் வழங்கினர்.
நிக்ழ்ச்சியினை அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள், ஜமால் முகம்மது கல்லூரி மற்றும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நலன் விரும்பிகள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
விழா முடிவில், நிர்வாகக் குழு உறுப்பினர் முகம்மது இசாக் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாபர் சித்திக் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications