"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதே நேரத்தில் அது மனிதக்குலத்திற்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்த அச்சமும் உலகளவில் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், க்ளாட் ஏஐ டூலை உருவாக்கிய 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் இணை நிறுவனரும் சிஇஓவுமான டாரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இந்த காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் துறை என்றால் அது ஏஐ தான். நாம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏஐ துறையில் ஏகப்பட்ட வளர்ச்சிகள் குவிந்து கொண்டே போகிறது. இவ்வளவு வேகமாக வளர்ச்சி இருக்கும் அதேநேரம் இதில் ஆபத்தும் இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.

Anthropic CEO Warns of AI Risks AI

ஏஐ

இதற்கிடையே பிரபல க்ளாட் ஏஐ டூலை உருவாக்கியுள்ள 'ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவனரும் சிஇஓவுமான டாரியோ அமோடி ஏஐ வளர்ச்சி தொடர்பாகச் சில கவலைகளைப் பகிர்ந்துள்ளார். புளூம்பெர்க் ஆவணப்படம் ஒன்றில் பேசிய அமோடி, "AIஐ பாதுகாப்பாக வைத்திருக்க நாம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்கிறோமா? நிச்சயமாக, முடிந்தவரை முயற்சி செய்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் குறைத்தோ அல்லது தற்காலிகமாக நிறுத்தியோ வைக்க வேண்டும் என்று அவர் உலகளாவிய ஏஐ நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏஐ டூல்கள் சமூகத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முழுமையாகப் புரியும் வரை இத்தகைய வேகம் தேவையில்லை என்பது அவரது கருத்து.

ஆபத்து

50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தாங்களோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களோ வேலை இழக்க நேரிடும் என்று அஞ்சுவதாக ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்தக் கவலை வயது, பாலினம் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களிடையே பரவலாக உள்ளது.

ஏஐ நிறுவனங்களுக்கு இடையேயும் இது குறித்த முரண்பாடுகள் உள்ளன. சாட்ஜிபிடியை உருவாக்கியுள்ள ஓபன் ஏஐ நிறுவனத்திலேயே பலரும் இது தொடர்பாகக் கவலை எழுப்பியுள்ளனர். மேலும், பல மூத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இணை நிறுவனர்கள் வெளியேறினர். லாபத்தை விட பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் மன்னிப்பு கோரியதுடன், எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய AIஐ உருவாக்குவதில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏஐ தடை செய்யப்படலாம்

ஏஐ தொழில்நுட்பம் ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அது ஒரு சாத்தியமான ஒன்றுதான்" என்று அமோடி பதிலளித்தார். ஏஐ தொழில்நுட்பம் ஏதேனும் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தினால், அதனைத் தடை செய்வது நியாயமானது என்பதே அவரது பதிலாக இருக்கிறது.

ஏஐ அமைப்புகளை வெளியிடும் முன், அரசுத் தரப்பிலிருந்து கடுமையான பாதுகாப்புச் சோதனைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அமோடி வலியுறுத்தியுள்ளார். ஏஐ நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையோடு சேர்த்து அரசு தரப்பு கட்டுப்பாடுகளும் தேவை என்பது அவரது வாதம். இது தொடர்பாக அவர் மேலும், "ஏஐ அமைப்புகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடும் முன், மூன்றாம் தரப்பு சுதந்திரமான சோதனைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அதிகாரம் தேவை

சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது மனிதக் கட்டுப்பாட்டை மீறும் ஆபத்து உள்ள ஏஐ அமைப்புகளை முடக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மருந்துகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ளது போன்ற ரிலீஸ் செய்யப்படும் முன்பு ஏஐ டூல்களுக்கு பாதுகாப்புத் தணிக்கைகள் தேவை" என்றார்.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிவேகமாக இருப்பதாகக் கூறும் அமோடி, அந்த வேகத்தில் அரசு கொள்கைகளை உருவாக்குவதில்லை என்றார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், அதனை நிர்வகிக்கும் சட்டங்களுக்கும் இடையே உள்ள இந்த "முரண்பாடு" ஆபத்தானது என்று சொல்லும் அமோடி, ஏஐ தொழில்நுட்பம் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைச் சில மாதங்களிலேயே மாற்றியமைக்கக்கூடியது என்பதால், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+