11 மணி நேரம்.. 4 தீவிரவாதிகள்.. 100 பிணைக்கைதிகள்.. காபூல் தாக்குதல் முடிவுக்கு வந்தது எப்படி?
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. அந்த ஹோட்டலில் இருந்த வெளிநாட்டு நபர்கள் இதில் அதிகம் குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இதுவரை 6 பேர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் படாதபாடுபட்டு இருக்கிறது. மும்பை தாக்குதல் போலவே கோரமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.

2 தீவிரவாதிகள்
இந்த தாக்குதலில் நேற்று இரவே இரண்டு தீவிரவாதிகளை ராணுவம் கொலை செய்துவிட்டது. அவர்களை கொலை செய்து தான் அங்கு இருந்த முதல் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். இவர்கள் இருவரும் தரைத்தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

பெரிய போராட்டம்
ஆனால் மேல்தளத்தில் இருந்த தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறது. நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை அவர்களை பிடிக்க முடியாமல் திணறி உள்ளனர். அவர்களிடம் சிறிய ரக குண்டுகள் நிறைய இருந்துள்ளது.

வெளிநாட்டு பயணிகள்
இந்த இரண்டு பேர்தான் நிறைய வெளிநாட்டு பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தார்கள். மேலும் ராணுவத்திடம் எதிர்த்தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் இருந்தார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

எப்படி
அதன்பின் ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மேல்தளத்திற்கு சென்றது. அங்கு இருந்து ஹோட்டலுக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. அதன்முலம் மீதம் இருந்த 2 தீவிரவாதிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மீதம் உள்ள ஒருவர் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முடிவுக்கு வந்தது
தற்போது இந்த தாக்குதல் முடிவுக்கு வந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை இதில் 6 பேர் மரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் இனிதான் தெரியும் என்று ஆப்கான் அரசு தெரிவித்து இருக்கிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications