ஓடுபாதையில் விமானத்தில் தீ விபத்து; சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு!
சிகாகோ(யு.எஸ்): புறப்படத் தயாராக இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒடுபாதையில் சென்று கொண்டிருந்த போது எஞ்சினில் தீப்பிடித்து எரிந்தது.
பயணிகள் அவசர வழியில் இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். சறுக்குப் பாதையில் இறங்கியதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது

போயிங் 767 ரக விமானத்தின் வலது புற எஞ்சின் கோளாறு காரணமாக இந்த விபத்து
நடந்துள்ளது. கொழுந்து விட்டு எரிந்ததுடன் கரும்புகையும் வெளியானது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது.
132 மைல் வேகத்தில் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருக்கும் போது எஞ்சினில் தீப்பிடித்துள்ளது.
வானில் பறக்கும் போது தீப்பிடித்து இருந்தால் மிகப்பெரிய விபத்தாக ஆகியிருக்கும்.
உயிர்சேதங்களும் ஏற்பட்டிருக்கும்.
சிகாகோ ஓஹேர் இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் மயாமிக்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எஞ்சினில் தீப்பிடித்த சம்பவம் விமானப் பயணிகளிடையே , பயணப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications