For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் தீவிரவாதிகள் மீது போலீசார் அதிரடி தாக்குதல்.. 18 பேர் பலி..

Google Oneindia Tamil News

பீஜிங் : ஸின்ஜியாங் மாகாணத்தில், போலீசார் நடத்திய அதிரடித் தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலியாகினர்.

அங்குள்ள கஷ்கார் என்ற நகரத்தில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் இன மக்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஹான் சீன மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

china attack

இந்த நிலையில் அங்கு போக்குவரத்து சோதனை சாவடியில் போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தியும், வெடிகுண்டு வீசியும் மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பல போலீசார் பலியாகினர். இந்த தாக்குதலை உய்குர் இனத்தவர் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அவர்கள் மீது போலீஸ் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால் அமெரிக்காவை மையமாக கொண்ட ரேடியோ ப்ரி ஆசியா வானொலி, போலீசாரின் அதிரடியில் 18 முதல் 28 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ரமலான் நோன்பு நேரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
At least 18 people are dead following a knife and bomb attack by a group of ethnic Uyghurs on a police traffic checkpoint in northwestern China's troubled Xinjiang region
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X