ஆப்கனில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த சில மணி நேரம் முன்பு நேர்ந்த கொடூரம்
காபூல்: அதிபர் தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்த ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் வரும் செப்டம்பர் 28ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் நாள் பிரச்சாரக் கூட்டம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் கபூல் விமான நிலையம் அருகே பிரச்சாரம் நடைபெற இருந்த மண்டபம் அருகே மாலை 4.40 மணி அளவில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அந்த பகுதிக்கு உடனடியாக விரைந்த விரைந்த மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த தகவலை ஆபகன் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரஷ்ராத் ரஷ்மி உறுதி செய்தார்.
ஆப்கானிஸ்தானின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான அப்துல்லா அப்துல்லா இந்த பிரச்சாரக்கூட்டம் அருகே தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்போதைய அதிபர் அஷ்ரப் கனியும் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications