“ஆட்டிசம்” பாதித்த குழந்தையை கூண்டில் அடைத்த பள்ளிக்கூடம்- தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தையை கூண்டில் அடைத்துவைத்த பள்ளியின் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர்.
அங்குள்ள ஒரு வகுப்பறையில் "ஆட்டிசம்" பாதிப்பு உடைய 10 வயது குழந்தையும் படித்து வந்தது. அக்குழந்தை மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டது.
எனவே, அந்த குழந்தையை மட்டும் 2 மீட்டர் அளவு இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுத்தனர். இது குறித்து கல்வி துறையிடம் புகார் செய்யப்பட்டது.
அங்கு சென்ற அதிகாரிகள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட குழந்தையை மீட்டனர். மேலும், இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications