மாயமான விமானம் குறித்த தகவல்களை மலேசியாவிடம் இருந்து ஆஸ்திரேலியா மறைக்கிறதா?
கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க உளவு செயற்கைக்கோளில் இருந்து மாயமான விமானம் பற்றி கிடைத்த தகவல்களை ஆஸ்திரேலியா மலேசியாவிடம் தெரிவிக்காமல் மறைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸில் உள்ள ஜிந்தாலி ராணுவ தளத்தில் ரேடார் உள்ளது. அந்த ரேடார் மூலம் 37 ஆயிரம் சதுர கிமீ தூரம் வரை வான் மற்றும் கடலில் உள்ள அசைவுகளை கண்காணிக்க முடியும். இந்நிலையில் ஆஸ்திரேலியா மாயமான மலேசிய விமானத்தை கண்காணித்ததா என்ற விவரத்தை தெரிவிக்க மறுக்கிறது என்று கூறப்படுகிறது.

ஜிந்தாலி ரேடார் மூலம் 3 ஆயிரம் கிமீ தொலைவில் செல்லும் விமானங்களையும் கண்காணிக்க முடியும். தென் சீன கடல் பகுதியில் பறந்த மலேசிய விமானத்தை கண்காணிக்கும் அளவுக்கு அந்த ரேடாரின் செயல்திறன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டு ராணுவ தளமான பைன் கேப் மாயமான விமானம் குறித்த தகவல்களை தெரிவிக்காமல் உள்ளது என்று நம்பப்படுகிறது. பைன் கேப்பின் முதல் வேலையே அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களை கட்டுப்படுத்துவது தான். ஆனால் அந்த ராணுவ தளத்தில் இருந்து இதுவரை மலேசிய அரசுக்கு ஒரு தகவலும் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications