வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி- 15 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் கொரோனா பரவல் கடுமையாகி உள்ளது. இதனால் அந்த நாட்டில் நேற்று முதல் மீண்டும் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Austria: Vienna terror attack- 2 dead, 15 injured

இந்த நிலையில் தலைநகர் வியன்னாவில் தேவாலயம் ஒன்றின் அருகே உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேவாலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்களா? என்பது உறுதி செய்யபடவில்லை.

இந்த தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+