Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி- 15 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் கொரோனா பரவல் கடுமையாகி உள்ளது. இதனால் அந்த நாட்டில் நேற்று முதல் மீண்டும் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Austria: Vienna terror attack- 2 dead, 15 injured

இந்த நிலையில் தலைநகர் வியன்னாவில் தேவாலயம் ஒன்றின் அருகே உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேவாலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்களா? என்பது உறுதி செய்யபடவில்லை.

இந்த தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+