பஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்
பஹ்ரை மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்புக்குழுமமான பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று செகாயா உணவக உள்ளரங்கில் நடைபெற்றது.
பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட இவ்விழாவில் சுமார் நூறு மங்கையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு பாடல், நடனம், பேச்சு, ஓவியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கண்கவர் கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சுபியா இணையதுல்லா, லதா சக்திவேல் மற்றும் தனலட்சுமி பாலச்சந்தர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

தமிழ் மங்கையர்கள்
பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இவ்விழாவில் சுமார் நூறு மங்கையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு பாடல், நடனம், பேச்சு, ஓவியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குழந்தை நலன்
அவர் பேசுகையில் "கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள் நலனில் கவனம் செலுத்தி இக்குழுவை சிறப்பாக நடத்தி வருகிறோம்.

ஏராளமானோர் பங்கேற்பு
மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில் பல்வேறு புதிய சிறப்பான செயல்பாடுகளை செய்து காட்டுவோம் என்று கூறினார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மகிழ்ச்சி
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். இந்த அந்நிய மண்ணில் ஒரு குடும்ப விழாவாக இருந்ததாக கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு கூறினர்.












Click it and Unblock the Notifications