இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: வங்கதேசம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டாக்கா: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேசம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் லத்தீஃபுல் ஹைதர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
வங்கதேச மண்ணில் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு தீவிரவாத குழுவும் முகாம் அமைக்கவில்லை. வங்கதேச மண்ணை மையமாகக் கொண்டு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் செயல்பட அனுமதிக்கமாட்டோம்.
அண்மையில் கூட எல்லைப் பகுதியில் தீவிரவாத குழுக்களின் பெருமளவிலான ஆயுதங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இத்தகைய செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு பிரிகேடியர் ஜெனரல் லத்தீஃபுல் ஹைதர் கூரியுள்ளார்.












Click it and Unblock the Notifications