வங்கதேசத்தில் தொடரும் பயங்கரம்... மேலும் ஒரு கோயில் பூசாரி வெட்டிக் கொலை
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று, மேலும் ஒரு இந்து கோயில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் கொல்லப்பட்ட 3வது இந்திய வம்சாவளி நபர் இவராகும்.
1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்கதேசம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டது.

சுமார் 16 கோடி மக்கள் வாழ்ந்து வரும் வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மேற்கு ஜினாய்கா மாவட்டத்தில் கோபால் கங்குலி (70) இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம், ஜெனைடா பகுதியை சேர்ந்த சமிர் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் முஸ்லிமாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிய நிலையில் இந்த கொலை நடந்திருந்தது.
பாப்னா மாவட்டம், ஹேமாயத்பூர் பகுதியில் தாக்கூர் அனுகுல் சந்திரா சத்சங்க பரம்தீர்த்த ஹேமாயத்புர்தாம் என்ற இந்து ஆசிரமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் நித்யாரஞ்சன் பாண்டே(60). கடந்த மாதம் 10 ஆம் தேதி வழக்கமான நடைபயிற்சி சென்றபோது நித்யாரஞ்சன் பாண்டேவை வழிமறித்த ஒரு கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற 30 படுகொலைகளில் 18 கொலைகளுக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மூன்று படுகொலைகளுக்கு இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜினைதா மாவட்டத்தில் இன்று காலை மேலும் ஒரு பூசாரி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இங்குள்ள இந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றிவந்த ஷைமானந்தா(45) என்பவர் இன்று அதிகாலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
வங்கதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்கம் வங்கதேசத்தில் வலுவாகி வருவதற்கான அறிகுறிகளாகவும், இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னர் நடந்த பூசாரிகள் கொலைக்கு காரணமான உள்ளூர் தீவிரவாதிகளின் கைவரிசையாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது என மாவட்ட தலைமை அதிகாரி மஹ்பூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications