அமெரிக்காவில் முதலீடு செய்ததற்காக இந்திய தொழிலதிபர் மிட்டலுக்கு நன்றி: ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதலீடு செய்ததன் மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கியதற்காக பிரிட்டன் வாழ் இந்தியரும் ஸ்டீல் தொழில் ஜாம்பவானுமான லட்சுமி மிட்டலுக்கு அதிபர் பராக் ஒபாமா தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழனன்று ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் உள்ள மிட்டலுக்கு சொந்தமான ஆர்சிலர் மிட்டல் கிளீவ்லேண்ட் ஸ்டீல் தொழிற்சாலையை பார்வையிடச் சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ‘கிளீவ்லேண்ட் உள்பட அமெரிக்காவில் முதலீடு செய்ததற்காக ஆர்சிலர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லட்சுமி மிட்டலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
"கிளீவ்லேண்ட் தொழிற்சாலையில் தயாராகும் ஸ்டீல் மிகவும் வலிமையானது. இதுபோன்ற தரமான ஸ்டீலை உலகில் வேறு எங்கும் காண முடியாது. இந்த ஆலை உலகிலேயே மிகவும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஆலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மிகவும் திறமையானவர்கள்" எனத் தெரிவித்தார் ஒபாமா.
கடந்த 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த போதும், ஆர்சிலர் நிறுவனம் மட்டும் தொடர்ந்து இயங்கியதை நினைவு கூர்ந்து ஒபாமா வெகுவாக பாராட்டினார்.
ஆர்சிலர் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.440 கோடி) முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் ஏராளமான புதிய வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது. இதுகுறித்து மிட்டல் தனது வரவேற்புரையில் கூறியதாவது, ‘அதிபர் ஒபாமா நம்முடைய தொழிற்சாலைக்கு வருகை தந்தது நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். கிளீவ்லேண்டில் 100 ஆண்டுகளுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்வோம்.
மேலும், ஒபாமா இங்கு வந்ததன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தில் உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஜிடிபி வளர்ச்சியைவிட உற்பத்தித் துறை வளர்ச்சி வலிமையாக உள்ளது" என்றார் மிட்டல்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications